இன்று பல மாகாணங்களில் கனமழை எச்சரிக்கை

Sri Lanka Climate Change Weather
By Rakshana MA Aug 04, 2025 03:21 AM GMT
Rakshana MA

Rakshana MA

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது.

இன்று (4) வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி வருமானம் தொடர்பான PIN இலக்கத்தின் காலம் நீட்டிப்பு

வரி வருமானம் தொடர்பான PIN இலக்கத்தின் காலம் நீட்டிப்பு

கனமழை எச்சரிக்கை

மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று பல மாகாணங்களில் கனமழை எச்சரிக்கை | Heavy Rain Alert In Sri Lanka

இந்த நிலையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

அத்தோடு இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்க, மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.   

கிண்ணியாவில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

கிண்ணியாவில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

[CKXOXQD

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW