வானிலை மாற்றம் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Sri Lankan Peoples
North Central Province
Northern Province of Sri Lanka
By Chandramathi
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் குருநாகல்,மொனராகலை மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
குறித்த மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் சில பகுதிகளில் வெப்பக் குறியீடு அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம், எச்சரிக்கை மட்டத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை
இதேவேளை வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தற்போது கடும் வெப்பம் நிலவுவதாகவும் மக்கள் அது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் மருத்துவத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
திறந்த வெளியில் வேலை செய்தல் மற்றும் அதிகளவு கஷ்டப்பட்டு வேலை செய்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
