ஒரு கோடி ரூபாய் செலவில் அட்டாளைச்சேனையில் வீதி புனரமைப்பு
அட்டாளைச்சேனை பிரதேச உள்ளக வீதிகள் மக்கள் பாவனைக்கு பொருத்தமற்றதாக உள்ளதை நிவர்த்திக்கும் வகையில் மீள் புனரமைப்பு செய்ய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் டீ - 100 திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் ஒரு அங்கமாக அட்டாளைச்சேனை 16 பிரிவின் ஈஸ்ட் வீதி மற்றும் உடையார் குறுக்கு வீதிகளை கொங்கிறீட் வீதிகளாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
வீதி புனரமைப்பு
இதன்போது சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் கொங்கிறீட் வீதிகளாக புனரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வீதியினை சட்டத்தரணி ஹரீஸ் நேரில் விஜயம் செய்து பார்வையிட்டுள்ளதுடன் மேலதிக அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளார்.
மேலும், இந்த விஜயத்தில் சட்டத்தரணி ஹரீஸ் உள்ளிட்ட பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






