நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் வெளியான தகவல்

Central Bank of Sri Lanka COVID-19 Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples
By Fathima Mar 26, 2023 08:48 AM GMT
Fathima

Fathima

இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களில் கடன் பெற்று அதனை செலுத்த முடியாத சுமார் ஆயிரம் பேரிடம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கடன் நிவாரண சபை திணைக்களம் தெரிவித்துள்ளது.

2012 ஆம் ஆண்டளவில் 55 வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் நாட்டில் இயங்கி வந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டளவில் அதனை 35 குறைக்க முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் வெளியான தகவல் | Happy News For Those Who Got Loan

இலங்கை மத்திய வங்கி

இந்த நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு இலங்கை மத்திய வங்கிக்கும் உண்டு. வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு எதிராக வைப்புத் தொகையை தவறாகப் பயன்படுத்தியதற்காக இலங்கை மத்திய வங்கி வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் மற்றும் பொருளாதார சிக்கல்கள் மோசமடைந்ததால் கடந்த காலங்களில் பலர் வாகனங்கள், நிலம் உள்ளிட்ட சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெற்றனர்.

அடமானம் வைத்து அதிலிருந்து மீள முடியாத மக்களுக்கு இத்திட்டத்தின் மூலம் நிவாரணம் வழங்கப்படும். நீதி அமைச்சகத்தின் கீழ் உள்ள கடன் நிவாரண பங்களிப்பு வாரியம், தனிநபர்களுக்கு இது தொடர்பான நிவாரணங்களை வழங்கும்.

நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் வெளியான தகவல் | Happy News For Those Who Got Loan

விசேட நிவாரணம் 

பல்வேறு காரணங்களால் கடனில் சிக்கித் தவிக்கும் மக்கள், கடன் பெற அடமானம் வைத்துள்ள சொத்தை மீட்க முடியாமல் பெரும் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இதன்மூலம், கடன் வழங்கியவர்கள் மற்றும் நிறுவனங்களிடம், கடன் பெற்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சலுகை வழங்கத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத பல்வேறு நிதி நிறுவனங்களில் கடன் பெற்று சிரமத்திற்குள்ளான மக்களுக்கு விசேட நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக வருடத்திற்கு சுமார் 35 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

கடன் நிவாரணம் வழங்குவதில் நிதி வரம்பு இல்லை. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று சிரமப்படும் நபருக்கு கூட தேவையான நிவாரணம் வழங்கப்படுகிறது என கடன் நிவாரண சபை திணைக்களத்தின் செயலாளர் சுபாஷினி தயானந்த தெரிவித்துள்ளார்.