கல்வியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு அரைநாள் விடுமுறை வழங்க கோரிக்கை முன்வைப்பு
ஹஜ்ஜூப் பெருநாளுக்காக கல்விக் கல்லூரி ஆசிரியர்களுக்கு வெள்ளிக்கிழமை அரைநாள் விடுமுறை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் (Imran Maharoof) கோரிக்கை முன்வைத்துள்ளார்.
பிரதமரை நேற்று (03.06.2025) நேரில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் இது தொடர்பான மனு ஒன்றையும் கையளித்தார்.
எதிர்வரும் 7ஆம் திகதி ஹஜ்ஜூப் பெருநாள் தினமாகும். வழமையாக வெள்ளிக்கிழமை மாலை வரை கல்விக் கல்லூரிகளில் போதனை செயற்பாடுகள் இடம் பெறுகின்றன.
விடுமுறைக்கான கோரிக்கை
இதன் பின்னர் தூர இடங்களுக்குச் செல்லும் ஆசிரியர் பயிலுனர்களால் அவர்களது இருப்பிடங்களுக்குச் செல்வதில் இடர்பாடுகள் உள்ளன.
எனவே, இதனைக் கருத்தில் கொண்டு கல்விக் கல்லூரிகளின் முஸ்லிம் ஆசிரியர்பயிலுனர்களுக்கு வெள்ளிக்கிழமை அரைநாள் விடுமுறை வழங்க ஏற்பாடு செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை செவிமடுத்த பிரதமர் உரிய அதிகாரிகளோடு கலந்துரையடி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |