நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை

Eid-al-Adha Sri Lankan Peoples
By Raghav Jun 07, 2025 02:26 PM GMT
Raghav

Raghav

ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் முன்னுரிமையளிக்கும் நபிகள் நாயகத்தின் வழிமுறைகளை பின்பற்றும் உலகவாழ் முஸ்லிம் மக்கள் ஈதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ்ஜூப் பெருநாளை இன்று (7) கொண்டாடுகின்றனர்.

உலகளாவிய ரீதியாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற பண்டிகைகளில் ஒன்றே இதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ்ஜூப் பெருநாள் ஆகும்.

இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல் ஹஜ் மாதம் பிறை 10 இல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

இதன் அடிப்படையில் நாட்டிலுள்ள சக மஸ்ஜிதுகளிலும் திறந்தவெளி அரங்குகளிலும் இன்று (7) காலை பெருநாள் தொழுகை நடைபெற்றது. 

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேதனம் : பிரதமர் வெளியிட்ட தகவல்

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேதனம் : பிரதமர் வெளியிட்ட தகவல்

இறைதூதர் இப்றாஹிமின் பூமியில் சமாதானம் மலரட்டும் - ரிஷாட் பதியுதீன்

இறைதூதர் இப்றாஹிமின் பூமியில் சமாதானம் மலரட்டும் - ரிஷாட் பதியுதீன்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW