தப்பிச் செல்ல முயன்ற நபர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு

Sri Lanka Police Kegalle Hospitals in Sri Lanka
By Fathima Jun 14, 2023 12:58 PM GMT
Fathima

Fathima

பொலிஸாரின் உத்தரவை பொருட்படுத்தாமல் தப்பி செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் மீது பொலிஸாரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவமானது இன்று (14.06.2023) றம்புக்கணை- போலகம, கொட்டகம சந்தியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதியின் இடது பாதம் மற்றும் இடது கையில் துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்துள்ளது.

பொலிஸார் விசாரணை

தப்பிச் செல்ல முயன்ற நபர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு | Gun Shoot Rambukkana Police

இதனையடுத்து துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த சந்தேகநபரை கேகாலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக பொலிஸார் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் சந்கேதநபர் றம்புக்கணை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், தப்பி செல்ல முயன்றதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.