நுரைச்­சோலை சுனாமி வீட்டுத்திட்­டம் தொடர்பில் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள கோரிக்கை

Ampara Sri Lanka Imran Maharoof
By Mubarak Jul 08, 2023 06:25 PM GMT
Mubarak

Mubarak

சவுதி அன்பளிப்பு செய்த நுரைச்­சோலை சுனாமி வீட்டுத்திட்­டம் விடயத்தில் அரசாங்கம் எவ்வித காத்திரமான நடவடிக்கையும் எடுக்காது பாராமுகமாக செயற்படுகிறது என திருகோணமலை மாவட்ட ஐ.ம.ச நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சபையில் குற்றம்சுமத்தியுள்ளார்.

இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அக்­க­ரைப்­பற்று, நுரைச்­சோலை சுனாமி வீட்டுத் திட்­டம் நீண்ட காலமாக பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல் இருக்கின்றது.

நுரைச்­சோலை சுனாமி வீட்டுத்திட்­டம் தொடர்பில் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள கோரிக்கை | Govt Stands Nuraicholai Tsunami Housing Project

இந்த விடயம் தொடர்­பி­ல் கொழும்­பி­லுள்ள சவுதி அரே­பிய தூது­வ­ரா­ல­யத்தின் ஊடாக அர­சாங்­கத்­திடம் தொடர்ச்­சி­யாக கோரிக்கை முன்­வைக்­கப்­பட்டு வருகின்றது.

எனினும், இந்த விடயம் தொடர்பில் இலங்கை அர­சாங்கம் இன்று வரை எந்­த­வொரு காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­யி­னையும் முன்­னெ­டுக்­க­வில்லை.

பய­னா­ளி­களின் பாவ­னைக்கு இந்த வீட்டுத்திட்டம் கைய­ளிக்­கப்­ப­டா­மை­யினால் வீட்டுத்திட்டம் பற்றைக்காடாக மாறி­யுள்­ளது என இம்ரான் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.