அரச வேலைக்கு ஆட்சேர்ப்பு! சந்தன அபேரத்ன வெளியிட்ட தகவல்

Government Employee Government Of Sri Lanka Sri Lanka Government
By Fathima Nov 19, 2025 01:04 PM GMT
Fathima

Fathima

சுமார் 70,000 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (19.11.2025) நடைபெற்ற பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு மசோதா மீதான குழு அமர்வுகளின் விவாதத்தின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சேர்ப்பு 

அரச ஊழியர்களில் பட்டதாரிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய அதிக எண்ணிக்கையிலான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அரச வேலைக்கு ஆட்சேர்ப்பு! சந்தன அபேரத்ன வெளியிட்ட தகவல் | Government Job Vacancies 2025 Gazette

இதற்கமைய,12,309 பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அரச சேவைக்குத் தேவையான ஆட்சேர்ப்பு மற்றும் அதன் தொடர்ச்சிக்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான இடைக்கால நடவடிக்கையாக பிரதமரின் செயலாளர் தலைமையில் அரச சேவை ஆட்சேர்ப்பு மறு ஆய்வுக் குழு நிறுவப்பட்டுள்ளது.

அந்த குழு அளிக்கும் பரிந்துரைகளை அமைச்சரவை பரிசீலித்து தேவையான ஆட்சேர்ப்புகளுக்கு அனுமதி வழங்கும் என்றும் சந்தன அபேரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.