உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் விடுமுறையில் உள்ள நிலையில் கடும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கட்சி காரியாலயத்தில் நேற்று(19.04.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
விடுமுறையில் உள்ள அரச ஊழியர்கள்
தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கும் அரச ஊழியர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து, தேர்தல் பணிகள் நிறைவு பெறும் வரை சேவையில் ஈடுபடக்கூடாது' என்ற சட்டத்திற்கமைய, அரச ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தை மாத்திரம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் தற்போதைய பொருளாதார பாதிப்பு, வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் அடிப்படை சம்பளத்தை கொண்டு எவ்வாறு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
அரசியலமைப்புக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து செய்ய வேண்டும்.
அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டினால் அரச ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.