அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் அரச ஊழியர்கள் அடிப்படைச் சம்பளம் கிடைக்காவிட்டால் உள்ளூராட்சி அமைச்சுக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் அடிப்படை சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும், அவர்கள் முறையாக சம்பளம் பெறுவதில்லை என தகவல் கிடைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
முறைப்பாடுகள்
எனவே சம்பளம் வழங்கப்படாமை தொடர்பான முறைப்பாடுகள் உடனடியாக ஆராயப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் விவகாரம் இழுபறியில் உள்ள நிலையில், சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி வரையான காலப்பகுதிகளை உள்ளடக்கிய வகையில் அடிப்படை சம்பளத்தை மாத்திரம் வழங்க (03.04.2023) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Joint Now |