அஸ்கிரிய - மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த உலகத் தமிழர் பேரவை
Sri Lankan Tamils
Kandy
Sri Lanka
By Rakesh
சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலகத் தமிழர்
பேரவையின் (GTF) உறுப்பினர்கள் நேற்று (08.12.2023) கண்டி தலதா மாளிகையைத்
தரிசித்தனர்.
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம்
அதற்கு முன்பாக அவர்கள், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட 6 முக்கிய விடயங்களை உள்ளடக்கிய “இமயமலைப் பிரகடனம்” தொடர்பில் உலகத் தமிழர் பேரவையினர் தெளிவுபடுத்தினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |