காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்ட உயர்தர பரீட்சைகள்!

Sri Lankan Peoples G.C.E.(A/L) Examination Harini Amarasuriya
By Fathima Nov 28, 2025 01:42 PM GMT
Fathima

Fathima

புதிய இணைப்பு

உயர்தரம் உட்பட அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இலங்கையை பாதிக்கும் மோசமான வானிலை காரணமாக, உயர்தரப் பரீட்சை உட்பட அனைத்துப் பரீட்சைகளையும் காலவரையின்றி ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு 

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை மீள ஆரம்பிப்பது குறித்து விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இந்த விசேட கலந்துரையாடல் இன்று மாலை பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெறவுள்ளது.

உயர்தர பரீட்சை

இந்த கலந்துரையாடலின் முடிவுகள் குறித்து நாளை காலை இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்ட உயர்தர பரீட்சைகள்! | Gce Al Exam Reshedule Date

இதன்போது பரீட்சைகளை மீள ஆரம்பிக்கும் திகதிகள் மற்றும் நடைமுறை நடவடிக்கைகள் குறித்தும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகிகள் பாதிப்புகளை குறைக்கும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

மேலும், பரீட்சை நடைபெறும் போது சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.