சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு காரைதீவில் நிதியுதவி

Ampara Sri Lanka Climate Change
By Harrish Jul 07, 2024 11:48 PM GMT
Harrish

Harrish

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வொன்று காரைதீவில் இடம்பெற்றுள்ளது.

 இந்த வருட ஆரம்பப் பகுதியில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அம்பாறை - காரைதீவு-01,06,07 மற்றும் 11 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் பத்தொன்பது வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

முன்பண தொகை

இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கான முன்பண தொகையாக 10,000 ரூபா வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் ராகுலநாயகி சசிந்திரன் தலைமையில் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தரின் ஒருங்கிணைப்பில் காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு காரைதீவில் நிதியுதவி | Funding For Affected Inclement Weather Karaitivu

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்திபன், நிர்வாக கிராம உத்தியோகத்தர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரிவுகளுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.


GalleryGalleryGallery