பண்டிகை காலத்தில் ஏழைகளுக்கான இலவச ஆடையகம் (Photos)

Sinhala and Tamil New Year Sri Lankan Peoples Iftar
By Fathima Apr 14, 2023 09:24 PM GMT
Fathima

Fathima

காத்தான்குடி பிஸ்மி இளைஞர் கழகம் நான்காவது வருடமாக ஏழைகளுக்கான பெருநாள் ஆடையகம் ஒன்றை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 16ஆம் திகதி நடாத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆடையகம் 2021 கடந்த ஆண்டு 2022 ஆகிய மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு நான்காவது வருடமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்த உள்ளது.

பண்டிகை காலத்தில் ஏழைகளுக்கான இலவச ஆடையகம் (Photos) | Free Festival Clothing Store For The Poor People

வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற மிகவும் வறிய குடும்பங்களை இலக்காகக் கொண்டு அவர்கள் பெருநாள் தினத்தில் மற்றவர்களைப் போல புதிய ஆடைகளை அணிய வேண்டும் என்பதற்காக இந்த வேலை திட்டத்தினை பிஸ்மி இளைஞர் கழகம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த திட்டத்தின் கீழ் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இந்த ஆடையகத்தில் 150 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர் .

அவர்களுக்கான அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் அன்றைய தினம் அங்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கான ஆடைகளை அவர்கள் தெரிவு செய்து பெற்றுக் கொள்ள உள்ளனர்.

பண்டிகை காலத்தில் ஏழைகளுக்கான இலவச ஆடையகம் (Photos) | Free Festival Clothing Store For The Poor People

இந்த முயற்சியின் ஊடாக மிகவும் வறிய குடும்பங்களை சேர்ந்த 150க்கு மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாக பயனடையவுள்ளனர்.

தொடர்ந்து இந்த பணியை செய்து வருகின்ற இந்த சகோதரர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக. இந்த முயற்சிக்காக உதவிய உதவுகின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அவர்களுடைய வாழ்வில் அல்லாஹ் அருள்பாலிப்பானாக.

GalleryGalleryGalleryGallery