சுற்றுலா சென்ற இளைஞர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்! ஒருவர் பலி - மூவர் மாயம்
மொனராகலை - வெல்லவாய - எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல்போன நிலையில், அவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை - வெல்லவாய பிரரேசத்திலுள்ள எல்லேவெல நீர்வீழ்ச்சிக்கு 10 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று, இன்று முற்பகல் நீராட சென்ற போது, அவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஏனையவர்களை தேடும் நடவடிக்கையை பொலிஸாரும், பிரதேசவாசிகளும் இணைந்து தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
தேடுதல் நடவடிக்கை தீவிரம்
இவ்வாறு காணாமல்போன இளைஞர்கள் கல்முனை, சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறைப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞர்கள் அங்கிருந்தவர்கள் எச்சரிக்கை விடுத்தும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்று ஆபத்தான பகுதியில் நீராடிய நிலையில் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய, சம்பவம் தொடர்பாக வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.