கடும் உணவு தட்டுப்பாட்டில் தவிக்கும் காசா மக்கள்

Food Shortages Israel World Gaza
By Rakshana MA May 03, 2025 03:54 AM GMT
Rakshana MA

Rakshana MA

இஸ்ரேலின் தாக்குதல்களால்(Israel) காசாவிலுள்ள கட்டிடங்கள் சிதைத்து விட்டது மட்டும் இல்லாமல், அங்குள்ள உயிர்கள் பசியாலும் சிதறி கிடக்கின்றன.

சமீபத்தில் வெளியான ஒரு காணொளியில், ஒரு பலஸ்தீனப் பெண் தரையில் விழுந்த உணவை எடுத்து சேகரிப்பது பதிவாகியிருந்தது.

இந்தக் காட்சிகள், அங்கு நிலவும் மனிதாபிமான நெருக்கடியின் கடுமையை வெளிப்படுத்துகின்றன.

இஸ்ரேலில் தேசிய அவசரகால நிலை பிரகடனம்

இஸ்ரேலில் தேசிய அவசரகால நிலை பிரகடனம்

உணவு தட்டுப்பாட்டில் தவிக்கும் மக்கள்

இஸ்ரேலின் முழுமையான தடையால், கடந்த இரண்டு மாதங்களாக காசா பகுதியில் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற அடிப்படை தேவைகள் கிடைக்காமல், மக்கள் கடும் பசியால் வாடுகின்றனர்.

இதில் சுமார் 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் அடிப்படை உணவிற்காகவே கஷ்டப்படுகிறார்கள். இன்னும் பலர் தினமும் ஒரு முறை மட்டுமே உணவு உண்ண முடிகின்றதாக காணப்படுகின்றது.

மேலும் குறித்த காணொளியில் காணப்படும் பெண், தரையில் விழுந்த உணவுகளை சேகரிப்பது, அங்கு நிலவும் உணவுப்பஞ்சத்தின் கடுமையை உணர்த்துகின்றதோடு, இது போன்ற காட்சிகள், காசா மக்களின் துயரமான நிலையை உலகிற்கு வெளிப்படுத்துகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கையில் கடந்த நான்கு மாதங்களில் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்கள்

இலங்கையில் கடந்த நான்கு மாதங்களில் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்கள்

எரிவாயு விலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு

எரிவாயு விலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW