நீச்சல் குளத்தில் மூழ்கி 5 வயது குழந்தை பலி

Sri Lanka Police Colombo Sri Lanka
By Aadhithya Jun 30, 2024 08:17 AM GMT
Aadhithya

Aadhithya

கொழும்பு (Colombo) கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடக்கு படகொட பிரதேசத்தில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் உள்ள நீச்சல் குளத்தில் நீராடச் சென்ற 5 வயது குழந்தையொன்று நீரில் மூழ்கி பலியாகியுள்ளது.

கொழும்பு, தெமட்டகொட பகுதியில் வசித்து வந்த 5 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேச வைத்தியசாலை

குறித்த நீச்சல் குளத்தில் வேறு பல குழந்தைகளுடன் அந்த குழந்தை நீராடிக்கொண்டிருந்த வேளை நீரில் மூழ்கியுள்ளது.

நீச்சல் குளத்தில் மூழ்கி 5 வயது குழந்தை பலி | Five Years Old Child Drown And Dead In Colombo

பின்னர் குழந்தை ஜாஎல பிரதேச வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள்