இன்று துல்-ஹஜ் மாதத்தின் முதல் நாள்

Sri Lanka Sri Lankan Peoples
By Rakshana MA May 29, 2025 06:41 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஹிஜ்ரி ஆண்டு என்பது நபி அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டதாகும்.

அந்நிகழ்வு கி.பி. 622 ஆம் ஆண்டு இடம்பெற்றது என்பதால் அவ்வாண்டே ஹிஜ்ரி ஆண்டின் முதல் ஆண்டாகக் கணிக்கப்படுகின்றது.

இவ்வாண்டு முறையை ஹழ்ரத் உமர் அவர்களே தனது ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தினார்கள். ஒரு ஹிஜ்ரி ஆண்டு என்பது பன்னிரண்டு சந்திர மாதங்களைக் கொண்டதாகும்.

நாட்டில் அதிகரிக்கும் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பாவனை..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் அதிகரிக்கும் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பாவனை..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

புனிதமான மாதம்

துல்ஹஜ், இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மற்றும் இறுதி மாதமாகும். இது இஸ்லாமியர்களுக்கு மிகவும் புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது.

ஏனெனில் இதில் ஹஜ் பயணமும், ஈத்-அல்-அழ்ஹா (ஹஜ் பெருநாள்) கொண்டாட்டமும் நடைபெறுகின்றன.

இன்று துல்-ஹஜ் மாதத்தின் முதல் நாள் | Firstday Od Dhul Hajj Srilanka

இந்த மாதம், இறைவனின் மீதான அர்ப்பணிப்பையும், தியாக உணர்வையும் வெளிப்படுத்துகிறது. துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இந்த நாட்களில் இறைவழிபாடு, நோன்பு, தர்மம் மற்றும் நற்செயல்கள் செய்வது பன்மடங்கு நன்மைகளை அள்ளி தருகின்றது.

மக்காவில் நடைபெறும் இந்த ஹஜ் பயணத்தில், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் கஃபாவைச் சுற்றி ஆன்மிகச் சடங்குகளை மேற்கொள்வார்கள்.

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்

பெருநாள்..

துல்ஹஜ்ஜின் பத்தாவது நாளில், ஈத்-அல்-அழ்ஹா கொண்டாடப்படுகிறது. இது, இறைத்தூதர் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் தியாகத்தை நினைவுகூர்கிறது.

இன்று துல்-ஹஜ் மாதத்தின் முதல் நாள் | Firstday Od Dhul Hajj Srilanka

இந்நாளில், பலி கொடுத்து, இறைச்சியை ஏழைகளுடன் பகிர்ந்து, ஒற்றுமையையும் கருணையையும் வெளிப்படுத்துகின்றனர்.

துல்ஹஜ் மாதம், இறையச்சம், பொறுமை, மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறது.

இது, இஸ்லாமியர்களுக்கு ஆன்மிக உணர்வைப் புதுப்பிக்கவும், இறைவனுடனான பிணைப்பை வலுப்படுத்தவும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் பறிபோன உயிர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

மட்டக்களப்பில் பறிபோன உயிர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

சாய்ந்தமருது சுகாதார அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட செயற்றிட்டம்

சாய்ந்தமருது சுகாதார அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட செயற்றிட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW