சம்மாந்துறையில் வீடொன்றில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு

Sri Lanka Police Ampara Sri Lanka Police Investigation
By Mayuri Sep 17, 2024 04:24 AM GMT
Mayuri

Mayuri

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சகோதரர்களுக்கிடையில் நேற்று இரவு ஏற்பட்ட குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பக்கீர் முகையதீன் றோஜான் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

ஆரம்ப கட்ட விசாரணை

ரிப்பிட்டர் ரக துப்பாக்கியே குறித்த படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்மாந்துறையில் வீடொன்றில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு | Firing Between Brothers In Sammanthurai

சந்தேகநபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

you may like this


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW