கொழும்பில் தாய், மகள் உட்பட மூவர் பலி - விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

Sri Lanka Police Colombo Sri Lanka Crime
By Vinoja Apr 20, 2026 02:28 PM GMT
Vinoja

Vinoja

கொழும்பு மஹரகமவில் 2 மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் பல தகவல்கள் தெரியவந்துள்ளது.

குறித்த வீட்டின் மேல் மாடிக்கு, வீட்டின் உரிமையாளரே கடந்த 18ஆம் திகதி இரவு தீ வைத்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும், தீ வைத்த வீட்டின் உரிமையாளரும் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் தாய், மகள் உட்பட மூவர் பலி - விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்! | Fire Kills 3 Persons Police Released Details

சிறுமியின் தந்தை களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவ இடத்தில் பெட்ரோல் வாடை வீசியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், வீட்டின் உரிமையாளர் மேல் மாடிக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும், இதன்போது அவரும் தீ விபத்தில் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு வசித்து வந்தவர்களுக்கும், வீட்டின் உரிமையாளருக்கும் இடையில் அடிக்கடி தகராறுகள் இடம்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தககது.