திருகோணமலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் உயிரிழப்பு

Trincomalee Sri Lanka Police Investigation Eastern Province
By Laksi Oct 02, 2024 04:26 AM GMT
Laksi

Laksi

திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியில் பம்பரா எனப்படும் குளவி கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அலுவலகத்திற்கு அருகில் நேற்றையதினம் (01) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில்,  நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையில் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றும் 54 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

அம்பாறையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

அம்பாறையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

மேலதிக விசாரணை

குறித்த நபர்  நேற்று காலை கடமைக்குச் சென்று கொண்டிருந்தபோது வீதியில் வைத்து குளவி தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் உயிரிழப்பு | Family Member Killed In Wasp Sting In Trinco

உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைப்பு

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைப்பு

முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW