போலி நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

Sri Lanka Police Kilinochchi Sri Lanka
By Mayuri Jul 02, 2024 12:33 PM GMT
Mayuri

Mayuri

போலி நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

போலி நாணயத்தாள்கள் அச்சிடுவது தொடர்பில் தம்புத்தேகம, கிளிநொச்சி மற்றும் எகொடஉயன ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசேட சுற்றிவளைப்பு

இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட பகுதிகளில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போலி நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை | Fake Rupee Notes In Sri Lanka

எனவே, போலி நாணயத்தாள்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW