5000ரூபா போலி நாணய தாள்களுடன் ஒருவர் கைது
5000 ரூபா பெறுமதியான போலி நாணய தாள்களுடன் ஒருவர் மோதர பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நேற்று (15.04.2023) மோதர, பகுதியில் வைத்து சோதனையிட்ட போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 5000 ரூபா பெறுமதியான 27 போலி நாணய தாள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் எச்சரிக்கை
சந்தேக நபர் இரத்தினபுரியை வசிப்பிடமாகக் கொண்டவர் என விசாரணையின் போது தெரியவந்தள்ளது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) போலி நாணயத்தாள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பண்டிகைக் காலத்தில் போலி நாணயங்களை சந்தையில் அறிமுகப்படுத்த முயற்சிக்கும் மோசடியாளர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுகொண்டுள்ளனர்.