இலங்கையில் மக்கள் மீது அடக்குமுறைகள்: ஜெனிவாவில் ஐரோப்பிய ஒன்றியம்
European Union
Sri Lanka Politician
Sri Lankan political crisis
By Fathima
இலங்கையில் அடக்குமுறைகள் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்படுவதை ஏற்க முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் நேற்றைய ஜெனிவா அமர்வில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, கருத்துச் சுதந்திரம், பொருளாதாரம், சமூக வலுவூட்டல், கலாசார உரிமைகள் என்பன சமமான முறையில் வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக உள்ளோம் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தமிழ் அரசியல் கட்சி
நல்லிணக்கத்தின் ஊடாகவும், தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுகளை முன்னெடுப்பதன் ஊடாகவும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |