குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Weather
By Fathima Apr 19, 2023 12:25 AM GMT
Fathima

Fathima

இந்த நாட்களில் குழந்தைகளிடையே சில நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சிறு குழந்தைகளை வெளியே செல்ல முடியாத வகையில் கார்களில் தனியாக விட வேண்டாம் எனவும் பெற்றோர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு | Emergency Notice Issued To The People Of Sri Lanka

குழந்தைகளிடையே ஒருவித மயக்கம், அல்லது தாகம், வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால், அதனை உடனடியாக நிவர்த்தி செய்வது அவசியம் எனவும் பாடசாலை விடுமுறை முடிந்துள்ள காலப்பகுதியில் சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீரிழப்பை தவிர்ப்பதில் பெற்றோர்கள் அவதானமாக இருக்க வேண்டுமென சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே குழந்தைகளுக்கு இயற்கையான திரவ உணவுகளை அதிகம் குடிக்கக் கொடுங்கள். குறிப்பாக பழச்சாறு,இளநீர் , நாரணம், மாதுளை, இனிப்பு பலாம்பழம் போன்றவை நீரிழப்பை தடுக்கும் என்பதால் அவற்றினை கொடுப்பது சிறந்தது என்றும் கூறியுள்ளார்.