அம்பாறையில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Ampara Elephant Eastern Province
By Laksi Sep 07, 2024 10:56 AM GMT
Laksi

Laksi

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் யானை தாக்கி  யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது இன்று (7) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான இலங்கை போக்குவரத்து சபை பேருந்து தரிப்பிடத்திற்கு பின் பக்கமாக அமைந்துள்ள குளக்கட்டில் இடம்பெற்றுள்ளது.

குறித்த யாசகர் பேருந்து தரிப்பிடத்தில் வழமை போன்று தங்கி இருந்து யாசகம் பெறுபவர் எனவும் காலை கடனை கழிப்பதற்கு குளக்கட்டினை நோக்கி சென்றிருந்த நிலையில் இவ்வாறு யானை தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு கணினி அவசர செயற்பாட்டு பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை..!

நாட்டு மக்களுக்கு கணினி அவசர செயற்பாட்டு பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை..!

உயிரிழப்பு

சம்பவத்தில் பெரிய நீலாவணை தொடர்மாடி வீட்டுத் திட்டத்தை முகவரியாக கொண்ட செல்லையா வேலாயுதம் என்ற 68 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

அம்பாறையில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு | Elephant Attack One Killed In Ampara

இதனையடுத்து ,கல்முனை தலைமையக பொலிஸார், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது வயல் அறுவடை காலம் என்பதால் யானை நடமாட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அரச உத்தியோகத்தர்களின் அதிகமான வாக்கு ரணிலுக்கே : காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு

அரச உத்தியோகத்தர்களின் அதிகமான வாக்கு ரணிலுக்கே : காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு

சம்மாந்துறையில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து பிரசார நடவடிக்கை

சம்மாந்துறையில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து பிரசார நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW