மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் திட்டம் நாளை முதல் அமுலில்

Colombo Sri Lanka
By Nafeel May 10, 2023 08:24 AM GMT

தற்போது எரிபொருளில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் திட்டம் நாளை (11) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் முதற்கட்டமாக 300 பெற்றோல் முச்சக்கர வண்டிகள் மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றப்படவுள்ளதாக ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.