நிறைவடையும் பிரசார நடவடிக்கைகள்! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Election Commission of Sri Lanka Colombo Election
By Mayuri Sep 17, 2024 11:29 AM GMT
Mayuri

Mayuri

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நாளையுடன் (18) நிறைவடையவுள்ள நிலையில், கொழும்பு, நுகேகொடை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் பிரதான வேட்பாளர்களின் இறுதி பிரசாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரசாரக் கூட்டம், கிராண்ட்பாஸ் - பலாமரச் சந்தியிலும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டம் மருதானை- டவர் மண்டபத்துக்கு முன்பாகவும் நாளை பிற்பகல் இடம்பெறவுள்ளன.

மக்களுக்கான அறிவுறுத்தல்

அதேநேரம், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவின் கூட்டம் நுகேகொடை நகரிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் பிரசாரக் கூட்டம் பிலியந்தலை பகுதியிலும் நாளை பிற்பகல் இடம்பெறவுள்ளது.

நிறைவடையும் பிரசார நடவடிக்கைகள்! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Election In Sri Lanka

எனவே, குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெறும் இடங்களை அண்மித்த வீதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்துக் கொள்வதற்கு மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களைக் கோரியுள்ளனர். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW