வேட்பாளர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து புலனாய்வு அறிக்கை பெறும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

Election Commission of Sri Lanka Election
By Mayuri Sep 11, 2024 05:56 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து தொடர்ச்சியாக புலனாய்வு அறிக்கைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் வேட்பாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உறுதி செய்யப்படும் பாதுகாப்பு

ஜனாதிபதி வேட்பாளர்கள் மக்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக அந்த பிரதேசத்தின் பாதுகாப்பு தொடர்பில் உறுதி செய்யப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வேட்பாளர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து புலனாய்வு அறிக்கை பெறும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு | Election In Sri Lanka

இந்த விசேட வேலைத் திட்டத்தின்கீழ் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அவசியமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW