ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Election
By Mayuri Aug 29, 2024 09:10 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற 38 வேட்பாளர்களில் 15 பேர் மாத்திரமே தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்தியுள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கண்காணிப்பு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வில் தெரியவந்துள்ள விடயம்

அவர் மேலும் தெரிவிக்கையில், மூன்று வேட்பாளர்கள் தொடர்பில் எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் | Election In Sri Lanka

ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கண்காணிப்பு நிறுவனம் முன்னெடுத்த ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW