அஞ்சல் வாக்குச் சீட்டு விநியோக பணி குறித்து வெளியிடப்பட்டுள்ள விடயம்

Election
By Mayuri Aug 28, 2024 09:53 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் நாளை மறுதினத்துக்குள் நிறைவு செய்யப்படும் எனப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித்த கே.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

வாக்குச் சீட்டுகளை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான 7 இலட்சத்து 12 ஆயிரத்து 128 அஞ்சல் வாக்குச் சீட்டுகளை உரிய அரச அதிகாரிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் நேற்று முதல் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தப் பணிகளுக்காக அஞ்சல் திணைக்களத்தின் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித்த கே. ரணசிங்க தெரிவித்துள்ளார். 

அஞ்சல் வாக்குச் சீட்டு விநியோக பணி குறித்து வெளியிடப்பட்டுள்ள விடயம் | Election In Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW