இரு முக்கிய அரசாங்கத் திட்டங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் வெளியிட்டுள்ள தகவல்

Election Political Development Current Political Scenario
By Shalini Balachandran Aug 05, 2024 09:54 AM GMT

சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டம் மற்றும் உறுமய காணி உறுதித் திட்டம் ஆகிய இரண்டு முக்கிய அரசாங்கத் திட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு இலங்கை தேர்தல்கள் ஆணையகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்

ஜனாதிபதித் தேர்தல்

ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை இந்த வேலைத்திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாக நாட்டின் தேர்தல் பிரதம அதிகாரி தெரிவித்துள்ளார்.

இரு முக்கிய அரசாங்கத் திட்டங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் வெளியிட்டுள்ள தகவல் | Election Commission Suspend Suraksha Urumaya

அத்தோடு, தேர்தல்கள் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க (R.M.A.L Rathnayake) இந்த திட்டங்களில் உள்ளார்ந்த பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளதுடன்  நியாயம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த குறித்த திட்டங்களின் தற்காலிக இடைநிறுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷிலுள்ள இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்

பங்களாதேஷிலுள்ள இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW