நிகழ்வுகளை நடத்த பெற்றோரிடம் பணம் வசூலிக்கக் கூடாது! கடிதம் மூலம் வலியுறுத்தல்

By Mayuri Sep 28, 2024 09:33 AM GMT
Mayuri

Mayuri

உலக சிறுவர் தினம் மற்றும் ஆசிரியர் தினத்தை பாடசாலைகளில் கொண்டாடுவதற்கு பெற்றோரிடம் இருந்து பணம் வசூலிப்பது தொடர்பில் கல்வி அமைச்சுக்கு தொடர்ச்சியாக பல்வேறு முறைப்பாடுகள் பதிவாகி வருவதாக கல்வி, விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதனால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதுடன், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

அதிபர்கள் வழங்க வேண்டிய உறுதி

எனவே, பாடசாலைகளில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாதவாறு அதிபர்கள் உறுதியளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்காக பெற்றோரிடம் பணம் வசூலிக்கக் கூடாது என மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டப் பணிப்பாளர்கள், அரசாங்க அதிபர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மற்றும் அதிபர்களுக்கு கடிதம் மூலம் செயலாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Gallery