இந்த நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது: பந்துல எச்சரிக்கை

Parliament of Sri Lanka Bandula Gunawardane Ranil Wickremesinghe Government Of Sri Lanka
By Mayuri Jul 02, 2024 04:18 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்திற்கு புறம்பாக செயற்பட எவரேனும் கனவு கண்டால், இந்த நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு முறையான திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். இவ்வாறானதொரு வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் அதேவேளை, ஜனாதிபதி வெளிநாடுகளுடன் உடன்படிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

பொருளாதார திட்டம்

இதில் எந்தவொரு ஒப்பந்தமும் வேலைத்திட்டமும் மறைக்கப்பட்டதல்ல. ஜனாதிபதி சகல தகவல்களையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இந்த நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது: பந்துல எச்சரிக்கை | Economy Of Sri Lanka

அந்த பின்னணியில், இந்த உருவாக்கப்பட்ட பொருளாதாரத் திட்டத்தைத் தவிர்த்து எவராலும் அரசாங்கத்தை நடத்த முடியாது.

இந்த பொருளாதாரத் திட்டத்திற்கு புறம்பாக யாராவது ஆட்சி செய்ய வேண்டும் என்று கனவு கண்டால், நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாது என்பதைக் கூற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW