வெளியேற்றப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Srilanka Freedom Party Duminda Dissanayake Mahinda Amaraweera Maithripala Sirisena
By Farook Sihan Apr 01, 2024 10:25 AM GMT
Farook Sihan

Farook Sihan

துமிந்த திசாநாயக்க (Thuminda Dissanayake), லசந்த அழகியவன்ன மற்றும் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (sri lanka freedom party) செயற்குழு பதவிகளில் இருந்து நீக்குவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இடைக்காலத் தடையுத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, இராஜாங்க அமைச்சர் லசந்த அலகிய வண்ண மற்றும் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் (sri lanka freedom party) முக்கிய பதவிகளில் இருந்து கடந்த சனிக்கிழமை (30) நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.