வரியவர்களுக்கான அன்பளிப்பாக சவூதி அரேபிய மன்னரிடமிருந்து உலர் உணவுப் பொருட்கள்

Ramadan Saudi Arabia
By Fathima Mar 29, 2023 08:38 AM GMT
Fathima

Fathima

ஹிஜ்ரி 1444ஆம் ஆண்டு ரமழான் மாதத்தை முன்னிட்டு வரியவர்களுக்கான அன்பளிப்பாக சவூதி அரேபிய இராஜ்யத்தின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸால் வழங்கப்படும் உலர் உணவுப் பொதிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வானது, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் அல் கஹ்தானியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இசட்.ஏ.எம்.பைசல் கலந்து கொண்டார்.

இந்த திட்டமானது சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார, தஃவா மற்றும் வழிகாட்டல் அமைச்சின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த உணவுப் பொதிகளானது இலங்கையில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களின் ஊடாக தகுதியான மக்களுக்கு விநியோகிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

Gallery