பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் வழங்கிய உலர் உணவுப் பொதிகள் (Photos)

Pakistan
By Fathima Apr 12, 2023 09:50 AM GMT
Fathima

Fathima

வசதி குறைந்த இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் முகமாகப் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த உலர் உணவுப் பொதிகள், பாகிஸ்தான் உயர்ஸ் தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் பாரூக் பர்கிரால், இலங்கை முஸ்லிம் மரண சேவை சங்கம், அல்-இஷாரா அறக்கட்டளை சங்கம் மற்றும் பாத்திமா நலன்புரி மையம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் பாடசாலை பைகள் தகுதியான மக்களுக்கு வழங்குவதற்காக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

புனித ரமழான் மாதத்தில் இந்த அமைப்புகளைச் சார்ந்திருக்கும் வசதி குறைந்த மக்களுக்கு மத்தியில் இந்த உலர் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்படும். பாகிஸ்தான் எப்போதும் இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட தயாராக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGalleryGallery