இலங்கையில் ஒன்பது வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை விதிப்பு

Sri Lanka Sri Lanka Government Iran Law and Order
By Fathima Oct 14, 2023 04:20 AM GMT
Fathima

Fathima

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஒன்பது ஈரானியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் ஈரானுக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.

இந்த 9 ஈரானியர்களும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள், தம்மீதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டுள்ளனர்.

கைதி பரிமாற்ற உடன்படிக்கை

இதனையடுத்து கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த ஈரானியர்களுக்கு மரண தண்டனையை விதித்துள்ளது.

இலங்கையில் ஒன்பது வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை விதிப்பு | Drug Trafficking In Sri Lanka

எவ்வாறாயினும், ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான கைதி பரிமாற்ற உடன்படிக்கையின் அடிப்படையில், ஈரானியர்கள் ஈரானிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.