மட்டக்களப்பில் விசேட சுற்றிவளைப்பு : சிக்கிய 12 சந்தேக நபர்கள்
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி மற்றும் மண்முனை பிரதேசங்களில் இன்று அதிகாலை, சிறப்பு அதிரடிச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிபரின் பணிப்புரையின் பேரில், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் 50 பொலிஸாரும், 6 விசேட அதிரடிப்படையினரும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
விசேட சுற்றிவளைப்பு
பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்ட இவர்கள், முக்கிய இடங்களை குறிவைத்து சோதனைகள் மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது, சட்டவிரோதமாக பயன்படுத்தப்படக்கூடிய வாகன இலக்கதகடுகள், பாதுகாப்பு தலைக்கவசங்கள், மற்றும் பக்கக் கண்ணாடிகள் இல்லாத 9 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.
இவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருளுடன் கைது
மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 3 பேரும், பிடியாணையுடன் தேடப்பட்டு வந்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஐஸ் போதைப்பொருளுடன் 2 பேர் மற்றும் கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 12 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவங்களைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகள் காத்தான்குடி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |