துருக்கிக்கு இலங்கையில் இருந்து சென்ற பெரும் தொகை நன்கொடை
Ali Sabry
Turkey
By Thahir
அண்மையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் 4.6 தொன் ஆடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
துருக்கியில் அண்மையில் ஏற்பட்ட நிலஅதிர்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை 4.6 டன் ஆடைகளை உதவியாக வழங்கியுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியினால் இலங்கைக்கான துருக்கி தூதுவரிடம் நேற்று இந்த ஆடைகள் கையளிக்கப்பட்டுள்ளன.
வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர் யசோஜா குணசேகர, துருக்கிய தூதரகம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.