பெண்கள் எதிர்நோக்கும் மோசமான நிலை! சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் குடும்ப வன்முறை சம்பவங்கள், குடும்ப நலன் மற்றும் மன ஆரோக்கியத்தில் தீவிர பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வன்முறை சம்பவங்கள் தற்போது நாடு முழுவதும் பெரிதளவில் பதிவாகி வருகின்றன என்றும், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மனநல ஆலோசனைகள்
அதிகாரப்பூர்வ அரச தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டு மட்டும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட 12,198 குடும்பங்களுக்கு உதவிகள் மற்றும் ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உதவி கோரியவர்களில் 91 சதவீதம் பெண்கள் என்பதோடு, மீதமுள்ள 9 சதவீதம் ஆண்கள் எனவும் அரச தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.
குடும்ப வன்முறையை எதிர்கொள்ள, சமுதாயம் முழுவதும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியமானவை எனவும், அவசியமான நேரத்தில் மனநல ஆலோசனையையும் சமூக சேவைகளையும் நாடுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |