11,12,13 ஆம் திகதிகளில் பேச்சுவார்த்தை : தமிழ் எம்.பிக்களுக்கு ரணில் அழைப்பு
Colombo
Sri Lanka
By Nafeel
இனப்பிரச்சினை தீர்வு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் அடுத்த வாரத்தில் 3 நாட்கள் தொடர் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.
அடுத்த வாரம் 11, 12, 13ஆம் திகதிகளில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து பேச்சுக்கான அழைப்பு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.