தினேஷ் ஷாஃப்டரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை முடிவு
By Thulsi
வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணம் நாளை (01) அறிவிக்கப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (31) அறிவித்துள்ளது.
ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு தனது அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் கையளித்ததையடுத்து இது அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதவான் நீதிமன்றம்
முத்திரையிடப்பட்ட அறிக்கையை பெற்றுக்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணம் நாளை அறிவிக்கப்படும் என அறிவித்தார்.