விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்

Sri Lanka Army Sri Lanka Police Sri Lankan Peoples
By Chandramathi Jan 28, 2024 01:52 AM GMT
Chandramathi

Chandramathi

பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் அழிப்பு தொடர்பில் புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் அழிப்பு

இதற்காக வனாத்தவில்லுவ பிரதேசத்தில் போதைப்பொருள் அழிக்கும் வசதியுடன் கூடிய கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம் | Destruction Of Drugs Seized By Security Forces

மேலும் இந்த திட்டம் தொடர்பான நடவடிக்கைகளை மார்ச் மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.