தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றில் மனு
Court of Appeal of Sri Lanka
Deshabandu Tennakoon
By Kamal
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றில் தனது சட்டத்தரணிகள் ஊடாக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மாத்தறை நீதவான் நீதிமன்றினால் தம்மை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவிற்கு இடைக்கால தடையுத்தரவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மனு பரிசீலனை
மேன்முறையீட்டு நீதிமன்றின் பதில் தலைவர் மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் சரத் தசாநாயக்க ஆகிய நீதிபதிகளின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் 12ம் திகதி இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |