முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது

CID - Sri Lanka Police Sri Lanka Deshabandu Tennakoon
By Shalini Balachandran Aug 20, 2025 10:27 AM GMT

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon ) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று (20) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 மே ஒன்பதாம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்மாந்துறை சபையில் உறுப்பினர்களிடையே அமளிதுமளி

சம்மாந்துறை சபையில் உறுப்பினர்களிடையே அமளிதுமளி

கோரிக்கை 

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் தாம் கைதுசெய்யப்படுவதை, தவிர்க்கும் வகையில் முன்பிணை வழங்குமாறு அவர் நீதிமன்றை கோரியிருந்தார்.

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது | Deshabandhu Tennakoon Arrested

இருப்பினும், அவரது முன்பிணை கோரிக்கை கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவினால் இன்று நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார சேவையாளர்களின் விடுமுறைகள் அதிரடியாக ரத்து

சுகாதார சேவையாளர்களின் விடுமுறைகள் அதிரடியாக ரத்து

வட்ஸ்அப் இலக்கத்திற்கு வந்து குவிந்த முறைப்பாடுகள்!

வட்ஸ்அப் இலக்கத்திற்கு வந்து குவிந்த முறைப்பாடுகள்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW