புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு!

Sri Lanka Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka
By Fathima Apr 13, 2023 03:02 AM GMT
Fathima

Fathima

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கைதிகள் தங்களது உறவினர்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகளை வழங்கச் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் (13.04.2023) முதல் எதிர்வரும் 14 மற்றும் 15 ஆகிய நாட்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு! | Department Of Prisons Sri Lanka

சிறைச்சாலைகள் திணைக்களம்

மேலும், கைதிகளைச் சந்திப்பதற்காக வரும் உறவினர்கள், ஒருவருக்கு போதுமான உணவு பொதி மற்றும் இனிப்பு பண்டங்களைக் கொண்டு வர முடியும் என சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.

அத்துடன், சகல சிறைச்சாலைகளிலும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.