இலங்கைப் பிரஜைகளுக்கு ஆட்பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்!
Sri Lanka
Sri Lankan Peoples
By Fathima
பிறப்புச் சான்றிதழ் இல்லாத இலங்கைப் பிரஜைகளுக்கு ஆட்பதிவுத் திணைக்களம் புதிய முறை ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி பிறப்புச் சான்றிதழ் இல்லாத இலங்கைப் பிரஜைகளுக்குத் தேசிய அடையாள அட்டை வழங்கும் புதிய முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அதிகாரிகளுக்கு ஏப்ரல் 19ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.