கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அதிபர்கள் எதிர்ப்பு

Dengue Prevalence in Sri Lanka Sri Lankan Schools National Health Service Education Chikungunya
By Rakshana MA Jun 10, 2025 03:50 AM GMT
Rakshana MA

Rakshana MA

கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு, பாடசாலை அதிபர்கள் தர நிர்ணய அதிகாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில், பாடசாலைகளில் டெங்கு அல்லது சிக்குன்குன்யா நோய் பரப்பும் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டால், அந்தப் பாடசாலைகளின் அதிபர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையிலே இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கைக்கு எதிராகவும், அரசாங்கத்தின் அரச ஊழியர்களை இலக்காக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் ஜூன் 15 முதல் பாடசாலை அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

வட்ஸ்அப் செயலியில் புதிய நடைமுறை அறிமுகம்

வட்ஸ்அப் செயலியில் புதிய நடைமுறை அறிமுகம்

நோயால் பாதிக்கப்படும் மாணவர்கள்

தற்போது நாடு முழுவதும் டெங்கு நோய் படிப்படியாக அதிகரித்து, கடுமையான அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. சுகாதாரத் துறை எச்சரிக்கையின்படி, பல பாடசாலை மாணவர்கள் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டால், அந்தப் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் உட்பட எடுக்கப்படலாம் என கல்வி அமைச்சு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அதிபர்கள் எதிர்ப்பு | Dengue School Warning Sparks Protest Srilanka

ஆனால், இந்தச் சுற்றறிக்கைக்கு பாடசாலை அதிபர்கள் தர நிர்ணய அதிகாரிகள் சங்கம் தமது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. 2025 ஜூன் 9 வரை, இலங்கை முழுவதும் 25,055 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், மேலும் 13 மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

இதில் மேல் மாகாணத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் மிகவும் ஆபத்தான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

காத்தான்குடியில் காய்த்து குலுங்கும் பேரீத்த மரங்கள்

காத்தான்குடியில் காய்த்து குலுங்கும் பேரீத்த மரங்கள்

விசேட நடவடிக்கைகள்

இரத்தினபுரி, மட்டக்களப்பு, திருகோணமலை, கண்டி மற்றும் காலி மாவட்டங்களும் டெங்கு பரவல் ஆபத்து மிக்க பகுதிகளாக உள்ளன.

கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அதிபர்கள் எதிர்ப்பு | Dengue School Warning Sparks Protest Srilanka

இதற்கிடையில், நுவரெலியா, பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் ஆறு தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்குள் சிக்குன்குன்யா நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அந்தப் பகுதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் நேற்று (09) நுளம்பு ஒழிப்பு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நாட்டில் மேற்கொள்ளப்படும் திடீர் சுற்றிவளைப்புகள் : வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டில் மேற்கொள்ளப்படும் திடீர் சுற்றிவளைப்புகள் : வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் மழை நிலைமை அதிகரிக்கும்

நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் மழை நிலைமை அதிகரிக்கும்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW